×

துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது

காரைக்கால்: காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் சிவக்குமார் உட்பட கோட்டுச்சேரி மேடு மீனவர்கள் 14 பேர் நேற்று முன்தினம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று மாலை 6 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு அருகே இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி முனையில் 14 பேரையும் கைது செய்து இலங்கை காங்கேசன்துறை கடற்றொழில் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

The post துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Sivakumar ,Kotucherry ,Medu ,Dinakaran ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...